யோகா பயிற்சி மூலம் கொரோனாவை வென்றெடுக்கலாம் : 8 மணி நேரம் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்
Jun 14 2020 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
யோகா பயிற்சி மூலம் கொரோனாவை வென்றெடுக்கலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தொடர்ந்து 8 மணி நேரம் யோகா பயிற்சி மேற்கொண்டு அசத்திக் காட்டினார்.
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராகவும், ஊரடங்கு காலத்தில் நாட்டு மக்கள் உடல் உறுதி பெற வலியுறுத்தியும், திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் பிரகாஷ் என்ற இளைஞர், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் யோகா நிகழ்ச்சியை மேற்கொண்டார். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தொடர்ந்து 8 மணி நேரம் யோகா செய்தது காண்போரை அவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். யோகா பயிற்சியை, தினமும் அரை மணி நேரம் பயிற்சி மேற்கொண்டால், உடல் உறுதி பெறுவதுடன். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.