ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
May 31 2020 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. ரோகித் சர்மாவின் சாதனையை கருதி அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா, மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோரது பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.