இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு
Apr 24 2020 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருந்த நிலையில், அனைத்து காலத்திற்கும் ஏற்ற சிறப்பான பேட்ஸ்மேன் சச்சின் என்று, அவரது பிறந்த நாளான இன்று ஐ.சி.சி. வாழ்த்து தெரிவித்துள்ளது.
லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் ப்ளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என்றெல்லாம் புகழப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 47-வது பிறந்தநாளாகும். இதனிடையே, சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டர் பதிவு வெளியிட்ட சச்சின், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னணியில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடப்போவதில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் 47-வது பிறந்த நாளான இன்று ஐ.சி.சி. அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அனைத்து காலத்திற்கும் ஏற்ற சிறப்பான பேட்ஸ்மேன் சச்சின் என்று புகழாரம் சூட்டியுள்ளது.