கொரோனா தீயை போன்றது - அதற்கு ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டாம் : சச்சின் டென்டுல்கர் உருக்கமான வீடியோ பதிவு
Apr 4 2020 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தீயை போன்றது என்றும், எனவே வீட்டை விட்டு வெளியே வந்து இந்த தொற்றுநோய் கூடுதலாக பரவ ஆக்ஸிஜன் கொடுத்து விடாதீர்கள் என சச்சின் டென்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது புயல் வேகத்தில் உலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்தியாவில் பரவிவரும் நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இதை தடுக்க போராடி வருகின்றன. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வெளியிட்டுள்ள வீடியோவில், தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் ஊரடங்கு விதிகளை பலரும் மீறி, வெளியே வருகின்றனர். கிரிக்கெட் விளையாடுவதற்கும், நண்பர்களை சந்திக்கவும் செல்கின்றனர். உங்களின் இந்தச் செயல் தேசத்திற்குத் தான் பாதிப்பாக அமையும் என்றும், வீட்டை விட்டு வெளியே வருவதன் மூலம், இதற்கு நாம் ஆக்சிஜன் வழங்கி விடக் கூடாது என கூறியுள்ளார். மேலும் இந்த பொன்னான நேரத்தை தங்களது குடும்பத்தினருடன் செலவழிக்க வேண்டும் என அவர் வலியுறுத்திள்ளார்.