சைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியது ஏன்? : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்
Apr 4 2020 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் திரு. விராட் கோலி தான் சைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியது குறித்து பதிலளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் நாடு நாடாக சுற்றி வந்த கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் ரசிகர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டிங் மூலம் உரையாடியுள்ளார். அப்போது பேசிய விராட் கோலி தான் 2018-ம் ஆண்டுக்கு முன்புவரை அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்தாகவும், ஒரு முறை தனது கழுத்து எலும்பில் வலி ஏற்பட்டு சோதனை செய்த போது தனக்கு யூரிக் அமிலம் அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டதால் சைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியதாகவும் கூறியுள்ளார்.