கொரோனா வைரஸ் காரணமாக சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக யு.இ.எஃப்.ஏ. அறிவிப்பு
Apr 2 2020 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கால் பந்தாட்ட போட்டிகளில் முக்கிய தொடர்களான சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பா லீக் ஆகியவை கொரோனா அச்சம் காரணமாக மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு பிற கண்டங்களை காட்டிலும் ஐரோப்பாவில் அதிகரித்து காணப்படுகிறது. அங்கு, கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதையடுத்து, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதியாட்டம், ஐரோப்பா லீக், யூரோ 2020 தொடருக்கான தகுதிச்சுற்று பிளே-ஆப்ஸ் ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.