கொரோனா தற்காப்பு நடவடிக்கையாக வீட்டிலேயே தங்கி இருப்பது புது அனுபவம் - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேட்டி
Mar 18 2020 7:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தற்காப்பு நடவடிக்கையாக வீட்டிலேயே தங்கி இருப்பது புது அனுபவம் தான் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு.கபில்தேவ் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு போட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் வீட்டிலேயே இருப்பது ஒரு புது அனுபவமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு. கபில்தேவ் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீரர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட இதுவே சரியான தருணம் என்றும், அடுத்து வரும் போட்டிகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள ஓய்வு அவசியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். மற்றவர்கள் நலனுக்காக பொது இடங்களை தவிர்ப்பது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.