கொரோனா பீதி - இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினரின் டோக்கியோ பயணம் ஒத்திவைப்பு
Mar 16 2020 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா அச்சம் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினரின் டோக்கியோ பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால், உலகின் பல்வேறு நாடுகள் முடங்கிப் போயுள்ளன. விளையாட்டு உலகமும் வேகம் குறைந்து காணப்படுகிறது. அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறாது என உலக நாடுகள் அறிவித்துள்ள நிலையில், விளையாட்டு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினரின் டோக்கியோ பயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.