இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் - தரம்சலாவில் இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை
Mar 12 2020 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், தரம்சலாவில் இன்று நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன்படி, இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், தரம்சலாவில், இன்று பிற்பகல் 1 முப்பது மணிக்கு நடைபெற உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை, கேப்டன் விராட் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காயம் குணமடையாததால், துணைக் கேப்டன் ரோகித் சர்மா அணியில் இடம்பெறவில்லை. 3 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் வெற்றியை பெற, இரண்டு அணி வீரர்களும் கடுமையாகப் போராடுவார்கள் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.