ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று : டோக்கியோ ஒலிம்பிக் - அமித் பங்கல், மேரி கோம் தகுதி
Mar 10 2020 7:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்றின் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட இந்தியாவின் மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.
ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று ஜோர்டானில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேறும் வீரர், வீராங்கனைகள், வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும். இந்தியாவின் அமித் பங்கல், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில், மகளிர் 51 கிலோ எடை பிரிவு காலிறுதியில், பிலிப்பைன்ஸ் வீராங்கனையை இந்தியாவின் மேரி கோம் எதிர்கொண்டார். இதில், 5-0 வீழ்த்தி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம், 2வது முறையாக ஒலிம்பிக்கில் விளையாட உள்ளார்.