தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டிகள் புதுச்சேரியில் தொடங்கியது - 70 குதிரையேற்ற வீரர்கள், 100 குதிரைகள் பங்கேற்பு
Feb 28 2020 7:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய அளவிலான குதிரையேற்றப்போட்டிகள் புதுச்சேரியில் இன்று தொடங்கியது.
புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள ரெட் எர்த் குதிரையேற்ற பள்ளி சார்பில், கடந்த 19 ஆண்டுகளாக தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 20-ம் ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் ஆரோவில் ரெட் எர்த் குதிரையேற்ற பள்ளியில் இன்று தொடங்கியது. 70 சென்டி மீட்டர் மற்றும் 100 சென்டி மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 70 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றனர். வரும் 1-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளுக்கு, சர்வதேச நடுவர்களான திரு.சாமி, திரு.சுனில்ஸ்ரீவ்தாஸ் ஆகியோர் செயல்படுகின்றனர். இப்போட்டிகளுக்காக மொத்தம் 100 குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.