வெலிங்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மோசமான பேட்டிங் - மழை காரணமாக போட்டி பாதிப்பு
Feb 21 2020 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தார். இதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணியில், இளம் வீரர்களான அகர்வால், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பிரித்வி ஷா 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து வந்த புஜாரா 11 ரன்களிலும், கேப்டன் கோலி 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மதிய உணவு இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. மதிய தேநீர் இடைவெளி வரை இந்தியா 5 விக்கெட்டுக்கு 122 ரன்களை எடுத்திருந்தது.