மகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு
Feb 20 2020 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகளிருக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 7-வது ஐசிசி மகளிர் T20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 முன்னணி அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியின் இறுதியாட்டம், சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை, இந்திய அணி சந்திக்கிறது. ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணி, தற்போது தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. வெற்றி கணக்குடன் இந்திய அணி இப்போட்டியை தொடங்கிட தீவிரம் காட்டி வருகிறது.