சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டி : தமிழக மாணவர்கள் 4 பேர் தங்கம், வெள்ளி வென்று சாதனை
Feb 19 2020 6:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 மாணவர்கள் 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். வாக்கோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 38 மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் காஞ்சிபுரத்தில் இருந்து பங்கேற்ற மாணவர்களில், 2 பேர் தங்க பதக்கமும், 2 பேர் வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மேலும் இந்த அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ஹரிஷ் சர்வதேச கிக் பாக்ஸிங் நடுவராக இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.