புனித அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு : 780 காளைகள் - 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
Feb 16 2020 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றுவரும் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 780 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை யொட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் திருக்கானூர் பட்டி ஊராட்சியில் உள்ள புனித அந்தோனியார் கோவில் திருவிழாவையொட்டி, இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த வீர விளையாட்டில் 780 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன. அவற்றை அடக்க 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள், வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.