கொரோனா பாதிப்பு இருந்தாலும் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் : சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
Feb 13 2020 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி ஜப்பானில் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு அதிகாரிகள், கொரோனா வைரஸை எதிர்கொள்ள ஜப்பானிய அரசு சிறப்புக்குழு அமைத்து கண்காணித்து வருவதால், ஒலிம்பிக் போட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்தனர்.