திருச்சியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி : கோவை பிஎஸ்ஜி கல்லூரியை வீழ்த்தி லயோலா கல்லூரி சாம்பியன்
Feb 12 2020 6:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், சென்னை லயோலா கல்லூரி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், சென்னை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், காரைக்குடி, திருச்செந்தூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் பாண்டிச்சேரி, கேரளா மாநிலங்களிலிருந்து தலைசிறந்த 18 கல்லூரிகள் பங்கேற்றன. நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், சென்னை லயோலா கல்லூரியும், கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் 5-3 என்ற கோல்கணக்கில் லயோலா கல்லூரி வெற்றி பெற்றது.