தற்காப்பு கலைகளை வளர்க்கும் விளையாட்டுப் போட்டிகள் : 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Feb 9 2020 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பள்ளி மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்கும் விதமாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கள் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்ட லெமூரியா தற்காப்பு கலை அமைப்பின் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவ மாணவிகளிடையே தற்காப்பு கலை போட்டிகள் நடத்தப்பட்டன. சிலம்பம், களரி, சுவடு, மல்லுசண்டை, ஜிம்னாஸ்டிக் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.