தேசிய அளவிலான சிலம்ப போட்டி சென்னையில் துவக்கம் : பல்வேறு பிரிவுகளின் கீழ் 260 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
Jan 27 2020 6:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய அளவில் 2 நாள் சிலம்பாட்ட போட்டி சென்னையில் தொடங்கியுள்ளது.
தேசிய அளவிலான மகளிர், ஆடவர் சிலம்பாட்ட போட்டி சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 23 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 260க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கை விளையாட்டு, வார் சிலம்பம், அலங்கார சிலம்பம் ஆகிய முறையில் சிலம்ப வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் வரும் மே மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.