அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து - ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் உயிரிழந்த பரிதாபம்
Jan 27 2020 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓய்வுபெற்ற அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட், அவரது 13 வயது மகள் உள்பட 9 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கோப் பிரயன்ட், 5 முறை என்.பி.ஏ சாம்பியன் வென்றவர். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றவர்.
கோப் பிரயன்ட்டின் மரண செய்தி, அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரயன்ட் மரணத்துக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.