ஆஸ்திரேலிய காட்டுத் தீயிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுவிட முடியாமல் திணறிய டென்னிஸ் வீராங்கனை - விளையாட்டை பாதியில் விட்ட அவலம்
Jan 14 2020 7:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய காட்டுத் தீயிலிருந்து வெளியேறிய புகையால் தொடர் இருமல் ஏற்பட்டதால், இளம் டென்னிஸ் வீராங்கணை விளையாட்டை பாதியில் விட்டுவிட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் டென்னிஸ் தகுதிச் சுற்று போட்டி ஒன்று நடந்துகொண்டிருந்தது. இப்போட்டியில் பங்கேற்ற ஸ்லோவேனிய நாட்டைச் சேர்ந்த Jakupovic, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு இருமலால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து இருமலை அவரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், விளையாட்டை பாதியில் விட்டுவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலிய காடுகளில் பற்றி எரிந்து வரும் தீயிலிருந்து வெளியேறிய புகை அதிக அளவில் காற்றில் கலந்துள்ளதே அவரது இருமலுக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.