இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் : மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை
Jan 14 2020 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
Aaron Finch தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வருகை தந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் ஒருநாள் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3க்கு 2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
இங்கிலாந்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடைந்த உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியா விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.
இரு அணிகளும் கடைசியாக மோதிய உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் 36 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.