மேற்குவங்காளத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்பு
Sep 23 2014 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சமூக ஒற்றுமையை வலியுறுத்தியும், நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வகையிலும், மேற்குவங்காளத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மேற்குவங்காள மாநிலம் சிலிகுரி நகரில் இத்தகைய மாராத்தான் ஓட்டப்பந்தயம் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆர்முடன் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த மாரத்தான் ஓட்டம், 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிட்ஹா சோஹன் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பங்கேற்றனர்.