தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில கூடைபந்து போட்டி : சென்னை கிறிஸ்துவ கல்லூரியும், கோவை பி.எஸ்.ஜி.ஆர் கல்லூரி அணியும் வெற்றி
Sep 27 2014 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில கூடைபந்து போட்டியில், சென்னை கிறிஸ்துவ கல்லூரியும், கோவை பி.எஸ்.ஜி.ஆர் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.
தூத்துக்குடியில், மாவட்ட கூடைபந்து கழகம் சார்பில், மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைபந்து போட்டி நேற்று துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், மாநில முழுவதிலிருந்து 20 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்களுக்கான போட்டியில், சென்னை கிறிஸ்துவ கல்லூரி அணி, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியை 47-க்கு 25 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மாணவிகளுக்கான போட்டியில், கோவை பி.எஸ்.ஜி.ஆர் கல்லூரி அணி, தூத்துக்குடி கல்லூரி அணியை 36-க்கு 28 என்ற புள்ளியில் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனிடையே, தமிழ்நாடு அமெச்சூர் டேபிள் டென்னிஸ் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான 2 நாள் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நாகர்கோவிலில் நேற்று தொடங்கியது. சென்னை, மதுரை, கோகை, ஈரோடு, நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் ஆண் பெண் தனித்தனி பிரிவு உட்பட 9 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.