நீலகிரி மாவட்டம் ராணுவ முகாம் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி தொடங்கியது : தமிழகம் முழுவதிலுமிருந்து 12 அணிகள் பங்கேற்பு
Sep 23 2014 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாம் விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி தொடங்கியுள்ளது. இதில், தமிழகம் முழுவதிலுமிருந்து 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
வெலிங்டன் மெட்ராஸ் ஆர்மி சென்டர் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் ஹாக்கி சங்க கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இப்போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளன. சென்னை ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 12 ஹாக்கி அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. இப்போட்டியை எம்.ஆர்.சி. ராணுவ முகாமின் தலைவர் பிரிகேடியர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொடக்கப் போட்டியில், திருச்சி ஜோ.ஜோ அணி, சென்னை சாய் அணியும் மோதின. இதில், சென்னை அணி 5-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுமார் ஒரு வாரம் காலம் இந்த ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளது. வெற்றி பெறும் அணிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உட்பட சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்படவுள்ளது.