பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி : முன்னணி வீரர் டேவிட் ஃபெரர் அதிர்ச்சித் தோல்வி
Apr 24 2014 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில், ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
பார்சிலோனா நகரில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், ஜார்ஜியாவின் டெமுராஸ் கபாஷ்விலியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்க முதலே சிறப்பாக விளையாடிய கபாஷ்விலி, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் டேவிட் ஃபெரரை தோற்கடித்து அதிர்ச்சியளித்தார்.
மற்றொரு 2-ம் சுற்று ஆட்டத்தில், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நாடல், சகநாட்டு வீரர் ஆல்பர்ட் ரமோசை, 7-6, 6-4 என்ற நேர் நெட்களில் தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.