காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியா பதக்க வேட்டை - ஒரே நாளில் 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றதால், பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்
Aug 1 2014 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியா நேற்று தங்க வேட்டை நடத்தியது. ஒரே நாளில் இந்தியா 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது.
ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற மகளிர் 55 கிலோ எடை பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் பபிதா குமாரி, தங்கம் வென்றார்.
அதைத்தொடர்ந்து, ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்கப் பதக்கம் வென்றார்.
இதேபோல், ஆடவர் வட்டு எறிதலில், இந்திய வீரர் விகாஸ் கவுடா தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதுமட்டுமின்றி, மகளிர் மல்யுத்தம் 63 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை கீதிகா ஜாகருக்கு வெள்ளிப் பதக்கமும், ஆடவர் 86 கிலோ எடை பிரிவில், இந்திய வீரர் பவன்குமாருக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.
இதனிடையே, ஆடவர் ஹாக்கியில், இந்திய அணி 5-க்கு 2 என்ற கோல் கணக்கில், தென்னாப்ரிக்காவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
இதன் மூலம், நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 6 பதக்கங்கள் கிடைத்தன. இதையடுத்து, பதக்கப் பட்டியலில், 47 பதக்கங்களுடன் இந்தியா 5-ம் இடத்திற்கு முன்னேறியது.