நாடு முழுவதும் பி.எஃப்.ஐ.க்கு தடை எதிரொலி : சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
Sep 29 2022 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் PFI அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுதல் மற்றும் சதித்திட்டங்களில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் Popular Frond of India என்ற அமைப்புக்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. அதையடுத்து அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் எதிர்விளைவுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், டெல்லி மாநகரம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. நகர் முழுவதும் நிலைமையை கண்காணிக்கும் வகையில் காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. டெல்லியின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் அவர்கள் ரோந்து சென்று ஆய்வு நடத்தினர்.