தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கோலாகலம் : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Jan 10 2020 2:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற, சப்தாவரணம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயத்தில், மார்கழி பெருவிழா, கடந்த
1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டாறு, மருங்கூர் மற்றும் குமாரகோவில் ஆகிய இடங்களில் இருந்து, திருவிழாவில் பங்கேற்க வந்த முருகன் மற்றும் விநாயகர் பெருமான் ஊர்திரும்பும் நிகழ்ச்சியான, சப்தாவரணம் வைபவம் வெகு விமரிசையாக அரங்கேறியது. திருவிழாவின் நிறைவு நாளில் சுவாமிகள் பிரியா விடை பெற்று, ஊர் திரும்பினர். அப்போது தாணுமூர்த்தி, முன்னுதித்த நங்கை அம்மன், அறம்வளர்த்த நாயகி, விநாயகர், பாலமுருகன் உள்ளிட்ட சுவாமிகள் ஒரு சேர பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.