கோபிசெட்டிபாளைம் பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் ஆலயத் திருவிழா : தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Jan 9 2020 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் ஆலயத்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில், கடந்த மாதம் 26-ம் தேதி, பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, வெகுவிமரிசையாக நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் குண்டம் இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். இத்திருவிழாவிற்கு ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர் நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். நாளை திருத்தேரோட்டமும், நாளை மறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.