ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம்
Jan 9 2020 9:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்னைக் காப்பு உற்சவத்தின் முதல் நாளான இன்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டாள் சன்னதியில் இருந்து புறப்பட்டு மாட வீதிகளில் வலம் வந்து பெரிய கோபுர வாயிலில், போர்வை பணிகளைத் தொடர்ந்து, அரையர் சேவை, தீர்த்தம், ஜடாரி, கோஷ்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீஆண்டாள் எண்ணைக் காப்பு மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு 365 விதமான மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட தைலக் காப்பு தங்க குடத்தில் வைத்து ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்பட்டு, மஞ்சள் நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இவ் உற்சவத்தை காண உள்ளூர், மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.