பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு கோயிலுக்கு தமிழர் உடையில் சாமி தரிசனம் செய்த வெளிநாட்டினர்
Jan 9 2020 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு அமெரிக்கா நியூயார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 18 பேர் பாரம்பரிய முறைப்படியும், மொட்டையடித்தும் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி சேலையை ஆண்களும், பெண்களும் நேர்த்தியாக அணிந்திருந்தனர். வெளிநாட்டினர் தமிழர் உடையில் சாமி தரிசனம் செய்ய வந்ததை பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்து வியந்தனர்.