சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் விசாரணை : 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அறிவிப்பு
Jan 8 2020 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள், வரும் 13-ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இதையடுத்து வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி திரு.பாப்டே, தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் திருமதி. பானுமதி, திரு.அசோக் பூஷன், திரு.நாகேஸ்வர ராவ், திரு.சந்தான கவுடா, திரு.அப்துல் நசீர், திரு.சுபாஷ் ரெட்டி, திரு.கவாய், திரு.சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.