கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
Dec 10 2019 8:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
Roll Visuals
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று அண்ணாமலையார் திருக்கோயிலின் பின்புறம் உள்ள, 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. 5 அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 3 ஆயிரத்து 500 கிலோ நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை அரோகரா முழக்கமிட்டபடி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.