சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் : பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
Dec 10 2019 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விரதமிருந்து மாலை அணிந்த பக்தர்கள், தரிசனத்திற்காக சபரிமலையில் குவிந்தவண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 மடங்கு பக்தர்கள் வந்துள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம் காரணமாக கோவில் வளாகத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.