கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பாடல் நிகழ்ச்சி : உதகை தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி தீப ஒளி பாடல்
Dec 10 2019 9:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் உதகையில் பழமைவாய்ந்த தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி தீப ஒளி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில், உதகையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தாமஸ் தேவாலயத்தில் தீப ஒளி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. வெண்ணிற ஆடை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தியபடி, பாடல் குழுவினர் இயேசு பிறப்பின் நிகழ்வுகள் மற்றும் பிறப்பின் முக்கியத்துவம் குறித்து பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வின்போது உலக மக்களின் அமைதிக்காக சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.