திருப்பதி கோவிலிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை
Dec 8 2019 6:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி கோவிலிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று வழங்கப்பட்டது.
கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டநிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும்வகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டு தோறும் கைசிக ஏகாதசியன்று வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள் யானை மீது வைத்து கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு உள்பிரகாரங்களில் வலம் வந்து கோவிலை அடைந்தது. இதில் அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.