கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் - வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
Dec 4 2019 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே வரும் டிசம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி டிசம்பர் 10, 11 ஆம் தேதிகளில் காலை 9 மணிக்கு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோன்று மதியம் 1.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.