சபரிமலையில் படிபூஜை நடத்த 2036-ஆம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவு : சபரிமலை நிர்வாகம்
Nov 21 2019 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோயில் படிபூஜை நடத்துவதற்கான முன்பதிவு வரும் 2036-ஆம் ஆண்டு வரை முடிந்து விட்டதாக சபரிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் படிபூஜையில் பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான முன்பதிவு 2036-ம் ஆண்டு வரை முடிந்து விட்டதால், அடுத்த பூஜைக்கு 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். படிபூஜை போல மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த உதயாஸ்தமன பூஜைக்காக 40 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவும் 2027-ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.