திருப்பதி லட்டுகளை 'சணல்' பையில் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு - பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை
Nov 19 2019 2:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக, திருப்பதி தேவஸ்தானம் லட்டுகளை 'சணல்' பைகளில் வழங்க முடிவு செய்துள்ளது.
திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் லட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், பேப்பர் பெட்டி, பேப்பர் பைகளிலும் லட்டுகள் விற்கப்படுகின்றன. இந்த நிலையில், 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய அலுமினியம் முலாம் பூசப்பட்ட 'சணல்' பைகளில் லட்டு பிரசாதங்களை வழங்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பிரசாதம் சணல் பைகளில் வழங்கப்படும் என தேவஸ்தானம் கூறியுள்ளது.