சபரிமலை - பக்தர்களின் வசதிக்காக 44 சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
Nov 19 2019 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை சீசனையொட்டி, பக்தர்களின் வசதிக்காக 44 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சபரிமலை மண்டலவிளக்கு பூஜை நேற்றுமுன்தினம் நடை திறக்கப்பட்டது. மண்டலவிளக்கு தரிசனத்திற்காக பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் ஒன்றாம் தேதி முதல், ஜனவரி 27ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - கொல்லம் இடையிலான மார்க்கத்திலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - திருவனந்தபுரம் இடையிலான மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.