திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகளின் விலை உயர்த்தப்படமாட்டாது - தேவஸ்தான நிர்வாகிகள் அறிவிப்பு
Nov 17 2019 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி தேவஸ்தானத்தில் விற்கப்படும் லட்டுகளின் விலை உயர்த்தப்படமாட்டாது என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி லட்டுகள் தற்போது விற்கப்படும் அதே மானிய விலையில் தான் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்றும், விலையில் எந்த மாற்றமும் செய்யும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்தார்.