திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விலை உயர்வு - ஒரு லட்டு விலை 50 ரூபாயாக அதிகரிப்பு
Nov 16 2019 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விற்பனை செய்யப்படும் லட்டுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வைகுண்டம் காத்திருப்பு அறை நுழைவு வாயிலில் 70 ரூபாய் சலுகை விலையில் 4 லட்டுகளை வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. ஒரு லட்டு தயார் செய்வதற்கு 40 ரூபாய் செலவாகும் நிலையில், சலுகை டோக்கன்களால் ஆண்டுக்கு 200 கோடி இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே 70 ரூபாய் லட்டு சலுகை டோக்கனை முற்றிலுமாக நிறுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக லட்டு வேண்டுமென்றால் தலா 50 ரூபாய் கொடுத்து எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றும் இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.