சபரிமலை சீசனையொட்டி, சிறப்புப் பேருந்துகள் - தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இன்றுமுதல் ஏற்பாடு
Nov 15 2019 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, தமிழகத்திலிருந்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கார்த்திகை முதல் நாளான வரும் 17-ஆம் தேதியில் இருந்து, 41 நாட்கள் மண்டல கால பூஜை நடைபெற உள்ளது. அதன்பின், டிசம்பர், 30 முதல், 2020 ஜனவரி, 20வரை, மகரவிளக்கு கால பூஜை நடைபெறுகின்றன. தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி வரை, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, திருச்சி, மதுரை, தென்காசி உள்ளிட்ட நகரங்களிலிருந்து தினமும் 64 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.