அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
Nov 15 2019 10:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழாவிற்காக, அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், மாவட்ட ஆட்சியரும், நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா, வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி தொடங்க உள்ளது. டிசம்பர் 10-ம் தேதி அதிகாலையில், அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, கோயிலின் பின்புறம் உள்ள மலை மீது, மகா தீபமும் ஏற்றப்படும். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவிற்கு, சுமார் 25 லட்சம் பக்தர்கள், திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அண்ணாமலையார் கோயிலில், அறநிலையத்துறை ஆணையர் பனீந்திரரெட்டி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி ஆகியோர், நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.