அரியலூரில் மாரியம்மன் கோயிலில் 40 சவரன் நகைகள் கொள்ளை : பக்தர்கள் அதிர்ச்சி
Nov 15 2019 9:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரில், மாரியம்மன் கோயிலில், 40 சவரன் நகைகள் திருடப்பட்ட சம்பவம், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மேலத்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில், கடந்த 11-ம் தேதி, அன்னாபிஷேகம், வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, அம்மனுக்கு, தாலி, மூக்குத்தி, ஒட்டியானம் உள்ளிட்ட நகைகளை சாத்தியிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை அறிந்த குருக்கள், கோயிலுக்குச் சென்று பார்த்தபோது, நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கோயில் தர்மகர்த்தா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோயில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை, தேடி வருகின்றனர்.