சபரிமலை தீர்ப்பு - இரு தரப்பினரும் வரவேற்பு : நம்பிக்கை காப்பாற்றப்பட்டுள்ளது - பந்தளம் போர்டு
Nov 14 2019 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்ப்பை இரு தரப்பினருமே வரவேற்றுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மீது தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் ஒரு தீர்ப்பும், 2 நீதிபதிகள் அதிலிருந்து மாறுபட்ட தீர்ப்பும் வழங்கினர். இதனைத்தொடர்ந்து இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இரு தரப்பினருமே வரவேற்றுள்ளனர். தங்களது நம்பிக்கை காப்பாற்றப்பட்டுள்ளதாக பந்தளம் போர்டு தெரிவித்துள்ளது. பெண்கள் நுழைவதற்கு எந்தவித இடைக்காலத் தடையும் இல்லை என தெரிவித்துள்ளதால், சில தினங்களில் கோவிலுக்கு செல்லவிருப்பதாக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். இவர் சென்ற ஆண்டே சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.