சபரிமலை தீர்ப்பையொட்டி கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - பத்தினம்திட்டா முதல் சன்னிதானம் வரை 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
Nov 14 2019 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ள நிலையில், தீர்ப்பு எதுவாயினும் அதை அரசு நிறைவேற்றும் என்று, கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு மீது, இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பத்தினம்திட்டா முதல் சன்னிதானம் வரை, 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.