புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு - இலவச தரிசனத்திற்காக, சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு காத்திருப்பு
Oct 12 2019 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, திருமலை ஏழுமலையான் கோயிலில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், திருப்பதியில் இருந்து பாத யாத்திரையாக நடந்து மலையேறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன், இலவச தரிசனத்திற்காக வழங்கப்படும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட தரிசன டோக்கன்கள் ஆகியவற்றை வழங்குவதை தேவஸ்தான நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிறைந்துள்ளனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள், இலவச தரிசனத்திற்காக சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு உணவு, குடிநீர், தேநீர், காபி, பால், மோர் ஆகியவை வழங்கப்படுகின்றன. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தங்கும் அறைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.