மீனாட்சியம்மன் கோயிலில் தீபாவளி முதல் இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கப்படும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Sep 12 2019 8:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீபாவளி முதல் பிரசாதமாக இலவச லட்டு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இன்று பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் பத்திரிகை செய்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதன்படி, தீபாவளி முதல் காலை முதல் மாலை வரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகள் அனைத்தும் உணவு பரிசோதனை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு, தூய்மையாக பராமரிக்கும் வகையில் இயந்திரங்கள் மூலமாகவே தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.